டெல்லி: ஜூலை 24 –
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது.
மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய செய்யப்பட்டத் கடந்த 2006, ஜூலை 11ம் தேதி,
மும்பை புறநகர் ரயில்களில் சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து 7 வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
800க்கும் மேற்பட்டோர் அப்பாவிகள் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2015ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, 12 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது















