மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

மாலே : ஜூலை 26 –
‘’மாலத்தீவுகள், இந்தியாவுக்கு அண்டை நாடு மட்டுமல்ல, சக பயணியாகவும் உள்ளது. அந்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளோம்,’’ என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நம் அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று சென்றார். அங்கு, இந்தியா – மாலத்தீவுகள் இடையே நட்புறவை மேம்படுத்துவது குறித்து அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பிரதமர் மோடி நேற்று பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இதுதவிர ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, இச்சந்திப்பின் வாயிலாக புதிய உச்சத்தை தொடும். மாலத்தீவுகளின் உண்மையான நட்பு நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மாலத்தீவுகளை, இந்தியா தன் அண்டை நாடாக மட்டும் கருதவில்லை; சக பயணியாக கருதுகிறது.