ராமேஸ்வரம்: ஜூலை 29-
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அவர்களது விசைப்படகுகளையும் கைப்பற்றியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பொய் குற்றச்சாட்டை முன் வைத்து மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீனவர்கள் பிரச்சினை என்பது பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளுடன் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 5 மீனவர்களை அவர்களது விசைப்படகுகளுடன் சிறை பிடித்தது.















