லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி:அக். 25- சென்​னை​யில் இருந்து டேங்​கர் லாரி ஒன்று நேற்று தார் லோடு ஏற்​றிக் கொண்டு சேலத்​துக்​குச் சென்று கொண்டிருந்​தது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டையை அடுத்த செம்​பியன்​மாதேவி மேம்​பாலத்​தில் சென்​ற​போது, ஓட்டுநர் துரை​ராஜ் லாரியை இடதுபுற​மாக திருப்​பிய​தாக கூறப்​படு​கிறது.
அப்​போது, கடலூர் பாதிரிக்​குப்​பத்​திலிருந்து சேலத்​துக்கு சென்று கொண்​டிருந்த கார், எதிர்​பா​ராத​வித​மாக டேங்​கர் லாரி​யின் பின்புறம் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதில், காரை ஓட்டி வந்த கடலூர் சந்​தோஷ், அவரது நண்​பர் சூரியகு​மார், சந்​தோஷின் பெரியம்மா பாக்​கியலட்​சுமி ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.
தகவலறிந்து வந்த போலீ​ஸார் மற்​றும் தீயணைப்பு வீரர்​கள் 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கள்​ளக்​குறிச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், விபத்து குறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.