கந்த சஷ்டி கோலாகலம்: இன்று மாலை சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: ​அக். 27-
திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.
கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு அதி​காலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. இன்று காலை 6 மணி​யள​வில் யாக​சாலை பூஜைகள் தொடங்​கு​கின்​றன. காலை 9 மணிக்கு மூல​வருக்கு உச்​சி​கால பூஜை நடை​பெறுகிறது.
பகல் 12.45 மணிக்கு தங்​கச் சப்​பரத்​தில் சுவாமி ஜெயந்​தி​நாதர் யாக​சாலை​யில் இருந்து புறப்​பா​டாகி சண்​முகவி​லாசம் சேர்​கிறார். பிற்​பகல் 2 மணிக்கு மேல் திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​தில் சுவாமி ஜெயந்​தி​நாதருக்கு அபிஷேகம், அலங்​காரம் நடை​பெறும். மாலை 4.30 மணி​யள​வில் சுவாமி ஜெயந்​தி​நாதர் சூரசம்​ஹாரத்​துக்​காக கடற்​கரைக்கு எழுந்​தருள்​கிறார்.
சஷ்டி பூஜை தகடு​: தொடர்ந்​து, கஜ முகம், சிங்க முகம் மற்​றும் சுயரூபத்​தோடு வரும் சூரபத்​மனை வதம் செய்​கிறார். சூரசம்​ஹாரம் முடிந்​ததும் சந்​தோஷ மண்​டபத்​தில் சுவாமிக்​கும், அம்​பாளுக்​கும் அபிஷேகம், அலங்​காரம், பூஜைகள் செய்​யப்​படு​கின்​றன. தொடர்ந்து சுவாமி கிரிபிர​காரம் உலா வந்து கோயில் சேரு​கிறார். இரவு பக்​தர்​களுக்கு சஷ்டி பூஜை தகடு​கள் கட்​டப்​படும். நாளை (அக்​.28) இரவு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற உள்​ளன.
வெளிநாட்டு பக்தர்கள்: கந்​தசஷ்டி விழாவை முன்​னிட்டு கடந்த 6 நாட்​களாக ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திருச்​செந்​தூரில் தங்கி விரதம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இலங்​கை, மலேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் தமிழகம் முழு​வ​தி​ல் இருந்​தும் வந்​துள்ள லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திருச்​செந்​தூரில் குவிந்​தனர். சூரசம்​ஹாரம் நடை​பெறும் கடற்​கரை​யில் கம்பு தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சுமார் 4,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். கோயில் பகு​தியை சுற்றி 250-க்​கும் மேற்​பட்ட கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. அரசுப் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் திருச்​செந்​தூருக்கு 300-க்​கும் மேற்​பட்ட சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. அதே​போல, சென்னை தாம்​பரத்​திலிருந்து திருச்​செந்​தூருக்கு சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. திருநெல்​வேலி – திருச்​செந்​தூர் இடையே சிறப்பு பயணி​கள் ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன. சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு தூத்​துக்​குடி மாவட்​டத்​துக்கு இன்று உள்​ளூர்​ விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.