மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான கட்டணம் உயர்வு

சென்னை: டிசம்பர் 24-
கிறிஸ்துமஸ், புத்​தாண்டு கொண்​டாட்​டங்​களுக்​காக​வும், பள்​ளி, கல்​லூரி​களுக்கு தொடர் விடுமுறை காரண​மாக​வும், சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​லத் தொடங்​கி​யுள்​ளனர்.
இதனால் சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​கள் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது. அதே​நேரம் தூத்​துக்​குடி, மதுரை, திருச்​சி, சேலம், கோவை, திரு​வனந்​த​புரம் செல்​லும் விமானங்​களில் டிக்​கெட்​கள் அனைத்​தும் காலி​யாகி​விட்​ட​தால், இணைப்பு விமானங்​களில் சென்​னையி​லிருந்து பெங்​களூரு சென்​று, அங்​கிருந்து செல்ல வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் விமான டிக்​கெட் கட்​ட​ணங்​கள் அதி​கரித்​துள்​ளன.
சென்னை -தூத்​துக்​குடி வழக்​க​மான கட்டணம் ரூ.4,100. பெங்​களூரு வழி​யாக சுற்​றிச் செல்​வ​தால் ரூ.13,400. சென்னை – மதுரை வழக்​க​மான கட்டணம் ரூ.4,248. பெங்​களூரு வழி​யாக சுற்​றிச் செல்​வ​தால் ரூ.13,160. சென்னை – திருச்சி வழக்​க​மான கட்டணம் ரூ.4,121. பெங்​களூரு வழி​யாக செல்​வ​தால் ரூ.13,842. சென்னை – சேலம் வழக்​க​மான கட்டணம் ரூ.3,093 பெங்​களூரு வழி​யாக சென்​றால் ரூ.8,688. சென்னை – கோவை வழக்​க​மான கட்டணம் ரூ.4,147. தற்​போது கட்டணம் ரூ.8,448. சென்னை – திரு​வனந்​த​புரம் வழக்​க​மான கட்டணம், ரூ.5,173 பெங்​களூரு வழி​யாக சுற்றி போவ​தால் ரூ.17,331 ஆகும்​.
புகார் வந்தால் நடவடிக்கை: இது​போல ஆம்னி பஸ் கட்டணம் வழக்​கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதி​கரித்​துள்​ளது.சாதாரண நாட்​களில் நெல்​லை, நாகர்​கோ​வில், கோவை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்கு சென்​னை​யில் இருந்து செல்ல ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்​கப்​படும். ஆனால் தற்​போது பல மடங்கு அதி​கரித்​துள்​ளது.சென்​னை​யில் இருந்து கோவைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதன பேருந்​துகளில் அதி​கபட்ச கட்டணம் ரூ.2400 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தற்​போது ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்​கப்​படு​கிறது