
நியூயார்க், டிச. 25- அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (சிபிபி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ செக்டாரில் உள்ள எல்லை ரோந்துப் படையினர், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது சட்டவிரோதமாகக் குடியேறியதுடன் வணிக ரீதியான ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு லாரி ஓட்டி வந்த 49 பேரை கைது செய்துள்ளனர். இதில் 30 பேர் இந்தியர்கள் ஆவர்.
















