
புதுச்சேரி: டிசம்பர் 27-
புதுச்சேரியில் போலி மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதுகுறித்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரிக்கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜாவிடம் சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரம் விசாரணை நடத்திய நிலையில், அவர் மீண்டும் காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். சிபிசிஐடி அதிகாரிகள் கூறும்போது, “வழக்கின் ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் தொடர்ந்து விசாரிப்பார்கள்” என்றனர்.















