திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு

திருமலை: ​டிசம்பர் 30 –
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு இன்று அதி​காலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு இன்று அனைத்து வைஷ்ணவ கோயில்​களி​லும் சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு பக்​தர்​கள் சுவாமியை வழிபட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இன்று செவ்​வாய்க்கிழமை அதி​காலை 1.30 மணிக்கு கோயி​லின் வெளிப்​புறத்​தில் உள்ள சொர்க்க வாசல் திறக்​கப்​பட்​டது. பூஜைகள் நடத்​தப்​பட்ட பின்​னர், பக்​தர்​கள் சொர்க்க வாசலில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சொர்க்க வாசலில் வித​வித​மான மலர் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.ஏழு​மலை​யானின் கற்ப கிரக சன்​ன​திக்கு ஒட்​டியபடி பக்​தர்​கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்​டியல் வைக்​கப்​பட்​டுள்ள இடத்​தில் வெளியே வரு​கின்​றனர்.
சொர்க்க வாசல் முழு​வதும் ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் ஊழியர்​கள் நின்றபடி பக்​தர்​களை வரிசை​யாகவும், விரை​வாக​வும் செல்​லு​மாறு அறி​வுறுத்தி வரு​கின்​றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்​டு, கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்​சுமி அலங்​காரம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​துள்​ளது. மேலும் கோயிலுக்​குள் மலர் அலங்​காரம் கண்ணை கவரும் விதத்​தில் உள்​ளது. இரவு நேரத்​தில் திரு​மலை முழு​வதும் வண்ண விளக்​கு​களால் ஜொலிக்​கிறது.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்​றும் ஜன.1-ம் தேதி ஆங்​கில புத்​தாண்டு என வரிசை​யாக 30, 31 மற்​றும் ஜன. 1-ம் தேதி மட்​டும் திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​க​னவே குலுக்​கல் முறை​யில் தரிசன டிக்​கெட்​டு​களை ஆன்​லைன் மூலம் பக்​தர்​களுக்கு வழங்கிவிட்​டது.
இதன் மூலம் நாள் ஒன்​றுக்கு சுமார் 70 ஆயிரம் சாமானிய பக்​தர்​கள் சுவாமியை தரிசித்து வரு​கின்​றனர். 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எவ்​வித டோக்​கன்​களோ டிக்​கெட்​டு​களோ இல்​லாமல் பக்​தர்​கள் தர்ம தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்​கலாம் என திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​கெ​னவே அறி​வித்​துள்​ளது.