ஈரானில் போராட்டம் தீவிரம் இதுவரை 2,000 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான்: ஜனவரி 14-
ஈ​ரானில் அரசுக்கு எதி​ரான போராட்​டங்​கள் தீவிரமடைந்து வரு​கின்​றன. அந்த நாட்​டில் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.
ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த டிசம்​பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. அப்​போது டெஹ்​ரானின் முக்​கிய வணிக சந்​தை​யான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்​கப்​பட்​டன. ஜென் இசட் இளைஞர்​கள் (1997 முதல் 2012-க்​குள் பிறந்​தவர்​கள்) தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்​கி​யான் பதவி விலக வலி​யுறுத்​தினர்.
கடந்த இரு வாரங்​களில் அரசுக்கு எதி​ரான போராட்​டம் ஈரான் முழு​வதும் வியாபித்து பரவி உள்​ளது. இளைஞர்​கள், வணி​கர்​கள், ஜனநாயக ஆட்​சியை விரும்​பும் அமைப்​பு​கள், குர்​து, பலூச் இன மக்​கள் அரசுக்கு எதி​ராக சாலை, தெருக்​களில் திரண்டு போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். நாளுக்கு நாள் போராட்​டம் வலு​வடைந்து வரு​வ​தால் ராணுவ வீரர்​கள் களமிறக்​கப்​பட்டு உள்​ளனர். பல்​வேறு இடங்​களில் போராட்​டக்​காரர்​கள் மீது துப்​பாக்​கிச்​சூடு நடத்​தப்​பட்டு வரு​கிறது.
இதுகுறித்து பெயர் வெளி​யிட விரும்​பாத ஈரான் மூத்த அதி​காரி ஒரு​வர் சர்​வ​தேச செய்தி நிறு​வனத்​திடம் நேற்று கூறும்​போது, “அரசுக்கு எதி​ரான போராட்​டத்​தில் ஈரான் முழு​வதும் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்து உள்​ளனர்” என்று தெரி​வித்​தார்.
ஈரான் இன்​டர்​நேஷனல் என்ற இணைய ஊடகம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ‘‘ஈரானில் கடந்த டிசம்​பர் முதல் இது​வரை 12,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். இதை அரசு தரப்பு மறைக்​கிறது. ஊடகங்​கள் முடக்​கப்​பட்டு உள்​ளன. இணைய சேவை, தகவல் தொடர்பு சேவை துண்​டிக்​கப்​பட்​டிருக்​கிறது” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் “ஈரானிய தேசப் பற்றாளர்களே தொடர்ந்து போராடுங்கள். அரசு கட்டமைப்புகளை கைப்பற்றுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பதற்​றம் அதி​கரித்து வரும் சூழலில் அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்​குதல் நடத்​தக்​கூடும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.