ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில்15 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

சாய்பாஸா: ஜனவரி 23 –
ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட்​டு​கள் 15 பேரை, பாது​காப்பு படை​யினர் சுட்​டுக் கொன்​றனர். இவர்​களில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்ட மூத்த தலை​வர் அனல் டாவும் ஒரு​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.
சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்ட்​டில் மாவோ​யிஸ்ட்​டு​களை ஒழிக்​கும் பணி தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு மறு​வாழ்​வுக்​குத் தேவை​யான உதவி​கள் செய்​யப்​படு​கின்​றன. சரணடைய மறுக்​கும் மாவோ​யிஸ்ட்​கள் பாது​காப்பு படை​யின​ரால் வேட்​டை​யாடப்​படு​கின்​றனர்.
இந்​நிலை​யில் ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரந்தா வனப்​பகு​தி​யில் மாவோ​யிஸ்ட் மூத்த தலை​வர் அனல் டா தனது கூட்​டாளி​களு​டன் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு உளவுத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து மாவோ​யிஸ்ட் வேட்​டைக்​காக உரு​வாக்​கப்​பட்ட மத்​திய ரிசர்வ் காவல் படை​யின் கோப்ரா பிரிவைச் சேர்ந்த 1,500 வீரர்​கள் நேற்று காலை 6 மணிக்கு சரந்தா வனப்​பகு​திக்​குள் நுழைந்து தேடு​தல் வேட்​டையை தொடங்​கினர். இந்​நிலை​யில் கும்டி என்ற இடத்​தில் தேடு​தல் வேட்டை நடை​பெற்ற போது பாது​காப்பு படை​யினருக்​கும், மாவோ​யிஸ்ட்​​களுக்​கும் இடையே துப்​பாக்கி சண்டை நடை​பெற்​றது.
ஆயுதங்​கள் பறி​முதல்: இதில் மாவோ​யிஸ்ட்​​கள் 15 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். மாவோ​யிஸ்ட்​களிட​மிருந்து ஏராள​மான ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அங்கு தேடு​தல் வேட்டை தொடர்ந்து நடை​பெறுகிறது. இறந்​தவர்​களில் ஒரு​வர் படி​ராம் மாஜி என்ற அனல் டா என்​பது தெரிய​வந்​துள்​ளது. இவரைப் பற்றி தகவல் அளிப்​பவருக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.
இவர் கிரிதி மாவட்​டத்​தின் பிர்​தந்த பகு​தி​யைச் சேர்ந்​தவர். கடந்த 1987-ம் ஆண்​டில் இருந்து இவர் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் உள்​ளார். இவரை போலீ​ஸார் பல ஆண்​டு​களாக தேடி வரு​கின்​றனர்.
ஜார்​க்கண்ட் மாநிலத்​தின் புதா பகத், சத்​ரா, லதேகர், கும்​லா, லோகர்​தா​கா, ராஞ்சி மற்​றும் பரஸ்​நாத் ஆகிய பகு​தி​களில் மாவோ​யிஸ்ட்​களின் ஆதிக்​கத்தை பாது​காப்பு படை​யினர் முற்​றி​லும் ஒழித்​து​விட்​டனர். கோல்​கன் மற்​றும் சரந்தா வனப்​பகுதி மட்​டுமே தற்​போது மாவோ​யிஸ்ட்​கள் ஆதிக்​கம் உள்​ளது. இந்​நிலை​யில் சரந்தா வனப் பகு​தி​யில் 15 மாவோ​யிஸ்ட்கள்​ சுட்​டுக்​ கொல்​லப்​பட்​டுள்​ளனர்​.