ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தல்

புதுடெல்லி: பிப்ரவரி 13
மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தியை எம்​.பி. பதவியி​ல் இருந்து தகு​தி நீக்​கம் செய்ய வலி​யுறுத்தி பாஜக எம்​.பி நிஷி​காந்த் துபே நோட்​டீஸ் வழங்கி உள்​ளார்.
நாடாளு​மன்​றத்​தில் பட்​ஜெட் மீதான விவாதம் நடை​பெற்று வருகிறது. புதன்​கிழமை நடை​பெற்ற விவாதத்​தில் பங்​கேற்ற ராகுல் காந்​தி, பேசும்​போது, “அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்பந்​தத்​தில் இந்​தியா பணிந்​து​விட்​டது. நமது தரவு​களை அவர்களிடம் ஒப்​படைத்​து​விட்​டது. தாய் பாரத மாதாவை விற்​று​விட்​டீர்​கள்” என கடுமை​யாக சாடி​னார்.
இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு எதி​ராக ‘சப்​ஸ்​டான்​டிவ் மோஷன்’ எனப்​படும் ஒரு முக்கி​யத் தீர்​மானத்​துக்​கான நோட்​டீஸை பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். ராகுல் காந்தி​யின் எம்​.பி. பதவியை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும் என்​றும், அவர் ஆயுட் ​காலம் முழு​வதும் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்க வேண்​டும் என்​றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாடாளு​மன்ற வளாகத்​தில் நிஷி​காந்த் துபே கூறியதாவது: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தாய்​லாந்​து, வியட்​நாம், கம்​போடியா போன்ற நாடு​களுக்கு அடிக்கடி பயணம் செய்​கிறார். அப்​போது இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் ஜார்ஜ் சோரஸ் அறக்​கட்​டளை, ஃபோர்டு அறக்கட்டளை மற்​றும் யுஎஸ்​ஏஐடி போன்ற அமைப்​பு​களின் பிரதிநி​தி​களை சந்​தித்​துப் பேசுகிறார். ராகுலின் செயல்​பாடு​கள் உள்​நாட்​டில் இருந்தே இந்​தி​யாவை சீர்​குலைக்​கும் வகை​யில் இருக்​கிறது.
அவர் வெளி​நாட்டு சக்​தி​களின் ஒரு கரு​வி​யாகச் செயல்படுகிறார். ராகுல் காந்​திக்கு நிதி அளிப்​பது யார் ? முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்​.எம். நரவனே​வின் வெளியிடப்​ப​டாத புத்​தகம் அவருக்கு எப்​படி கிடைத்​தது ? இது சாதாரண உரிமை மீறல் தீர்​மானம் அல்ல. ராகுல் காந்​தி​யின் ஒட்டுமொத்த நடத்தை மற்​றும் தேச நலனுக்கு எதி​ரான செயல்​பாடு​களுக்​காக இந்​தத் தீர்​மானத்​தைக் கொண்டு வந்​துள்​ளேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.காங்​கிரஸ் எம்​.பி. ரேணுகா சவுத்ரி கூறும்​போது, “நிஷி​காந்த் துபே மத்​திய அமைச்​ச​ராக விரும்​பு​கிறார், அதற்​காகவே ராகுல் காந்தியின் உறுப்​பினர் பதவியை ரத்து செய்​யத் துடிக்​கிறார்” என்று விமர்​சித்​துள்​ளார்மற்​றொரு மூத்த தலை​வர் கே.சி.வேணுகோ​பால் கூறும்​போது, “பாஜக​வின் இரட்டை நிலையை இது காட்​டு​கிறது. ராகுல் காந்தியின் கருத்​துகள் அவைக்​குறிப்​பில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆனால் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் அதே​போன்ற கருத்​து​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றன. மக்கள் ராகுல் காந்​தியை தேர்ந்​தெடுத்​துள்​ளனர், நாங்​கள் இதுபோன்ற நோட்​டீஸ்​களைக் கண்டு அஞ்​ச​மாட்​டோம்” என்​றார்.கடந்த காலங்​களில், மக்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் ‘சப்​ஸ்​டான்​டிவ் மோஷன்’ எனப்​படும் தீர்​மானத்​தைப் பயன்​படுத்​து​வது மிகவும் அரி​தான ஒன்​றாகவே இருந்​துள்​ளது. 1997ம் ஆண்டு மார்ச் மாதம் அப்​போதைய மக்​களவை சபா​நாயகர் பி.ஏ.சங்​மா, உ.பி.யின் அரசி​யல் சூழல் மற்​றும் அப்​போதைய ஆளுநர் ரமேஷ் பண்​டாரி​யின் செயல்​பாடு​கள் குறித்து பாஜக கொண்டு வந்த சப்​ஸ்​டான்​டிவ் மோஷனை அனு​ம​தித்​தார்.அந்​தத் தீர்​மானம் ஆளுநரைத் திரும்​பப் பெறக் கொண்டு வரப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்​மானம் ஏற்றுக்கொள்​ளப்​பட்டு சபை​யில் முன்​மொழியப்​பட்​டால்​, கட்டாயம்​ வி​வாதம்​ நடத்​தப்​பட வேண்​டும்​, அதைத்​ தொடர்ந்​து ​வாக்​கெடுப்​பு நடத்​தப்​படுவதும்​ அவசிய​மாகும்​.