“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்

கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்னேறியது. இந்த ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் விளாசிய 97 ரன்​கள் உதவி​யுடன் இந்​திய அணி 196 ரன்​கள் இலக்கை 4 பந்​துகள் மீதம் வைத்து வெற்றி கண்​டது. சூர்​யகு​மார் யாதவ் (18), திலக் வர்மா (27), ஷிவம் துபே (8) ஆகியோ​ரும் வெற்​றிக்கு தங்​களது பங்​களிப்பை வழங்​கினர். இந்​நிலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: ஒவ்​வொரு பங்​களிப்​பைப் பற்​றி​யும் நீங்​கள் பேசுவது மகிழ்ச்​சி​யளிக்​கிறது, ஏனென்​றால் பல ஆண்​டு​களாக, நாம் ஒரு சில பங்​களிப்​பு​களைப் பற்றி மட்​டுமே பேசி வரு​கிறோம். கிரிக்​கெட் ஒரு குழு விளை​யாட்​டு, இது எப்​போதும் குழு விளை​யாட்​டாகவே இருக்​கும். என்னை பொறுத்​தவரை​யில் ஷிவம் துபே அடித்த 2 பவுண்​டரி​களும் சஞ்சு சாம்​சன் குவித்த 97 ரன்​களைப் போலவே முக்​கி​யம். ஏனென்​றால் ஷிவம் துபே அந்த இரண்டு பவுண்​டரி​களை​யும் அடிக்​க​வில்லை என்​றால், சஞ்சு சாம்​சன் 97 ரன்​கள் குவித்​தது குறித்து பேசவே மாட்​டீர்​கள். பெரிய பங்​களிப்பு தலைப்​புச் செய்​தி​களில் இடம்​பிடிக்​கிறது. சிறிய பங்​களிப்​பு, அணி வெற்றி பெற உதவும். வெற்றி கோட்​டைக் கடக்க உதவும் அந்தபங்​களிப்பும் மிக​வும் முக்​கிய​மானது. நான் இருக்​கும் வரை இது​தான் தத்​து​வ​மாக இருக்கும்.டி20 கிரிக்​கெட் பயிற்சி முறை​களில் தரவு​களை நான் நம்​புவ​தில்​லை. அதை நான் பார்த்​த​தில்​லை. தரவு எதைப் பற்​றியது என்று கூட எனக்​குத் தெரி​யாது. ஏனென்​றால் பயிற்சி முறை​கள் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது என்று நான் உணர்​கிறேன். டி20 கிரிக்​கெட் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது. விளை​யாட்டு மற்​றும் டி 20 வடிவம் பற்றி எனக்கு என்ன அறிவு இருந்​தா​லும், அதை நான் கேப்​ட​னுக்​குக் கொடுக்க முயற்​சிக்​கிறேன், என்​னால் முடிந்​தவரை அவருக்கு உதவ முயற்​சிக்​கிறேன். ஆனால், இறுதி முடிவை எடுப்​பது கேப்​டன் தான்.