Home மாவட்டங்கள் பெங்களூர் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை

சென்னை: மார்ச் 13-
‘தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு இல்​லை; பொது​மக்​களிடம் வதந்தி பரப்​பி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.
ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்​குதலால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைபட்​டுள்​ளது.
இதனால் சமையல் எரி​வாயு பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் மட்​டும் கட்​டுப்​பாடு​களு​டன் பொது​மக்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​கின்​றன.கொள்​கிறேன் என்று கூறியுள்ளார்.இதற்​கிடையே பெட்​ரோல், டீசலுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​படப் போவ​தாக​வும், அதன் விலை உயரப் போவ​தாக​வும் சமூக வலை​தளங்​களில் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த மக்​கள், சென்னை உள்பட தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் உள்ளபெட்​ரோல் பங்க்​கு​களில் நேற்று முன்​தினம் இரவு முதலே குவி​யத் தொடங்​கினர். குறிப்​பாக, சென்​னை​யில் பல இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் பைக்​கு​கள், கார்​களில் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, எரிபொருளை நிரப்​பினர்.எழும்​பூர், சேத்துப்​பட்​டு, நுங்​கம்​பாக்​கம், அண்​ணா​சாலை, கோடம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ராயப்​பேட்​டை, அம்​பத்​தூர், முகப்​பேர், அண்​ணா நகர் உள்பட பல்​வேறு இடங்​களில் உள்ள பெட்​ரோல் பங்க்​கு​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. சிலர் கேன்​களில் பெட்​ரோல் வாங்க வந்​தனர். அவர்​களுக்கு பெட்​ரோல் வழங்க மறுத்​த​தால், ஊழியர்​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர் இதே​போல், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திருச்சி உள்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள பங்க்​கு​களில் பெரு​மள​வில் மக்​கள் குவிந்​த​தால், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​பட்​டது.
இதற்​கிடையே, எரிபொருள் தட்​டுப்​பாடு அச்​சத்​தில், சென்​னை​யில் பல இடங்​களில் பொது​மக்​கள் தங்​கள் பைக்​கு​கள், கார்​களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்​கிங்​கில் நிறுத்​தி​ விட்​டு, மெட்ரோ ரயி​லில் பயணித்தனர். இதனால், ஆலந்​தூர், பரங்​கிமலை, சென்ட்​ரல், கோயம்​பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்​கிங்​கில் வாக​னங்​களை நிறுத்த முடி​யாமல் வழக்​க​மாக வரும் பயணி​கள் சிரமப்​பட்​டனர்.