Home சினிமா ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

சென்னை: மே 18-
பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85. சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழி​யாக நேற்று மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.
மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.
இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.
மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.
இதற்​கிடையே, அடை​யாறு போலீ​ஸாரும் விரைந்து வந்​தனர். ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டது பிரபல திரைப்​படத் தயாரிப்​பாளர் கே.​ராஜன் (85) என்​பது தெரிய​வந்​தது.
போலீ​ஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். அவரது குடும்​பத்​தினருக்​கும் தகவல் கொடுத்​தனர். அடை​யாறு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்னை: பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85. சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழி​யாக நேற்று மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.
மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.
இதற்​கிடையே, அடை​யாறு போலீ​ஸாரும் விரைந்து வந்​தனர். ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டது பிரபல திரைப்​படத் தயாரிப்​பாளர் கே.​ராஜன் (85) என்​பது தெரிய​வந்​தது.போலீ​ஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். அவரது குடும்​பத்​தினருக்​கும் தகவல் கொடுத்​தனர். அடை​யாறு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.