Home மாவட்டங்கள் பெங்களூர் அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

சென்னை: ஜூன் 2 –
தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்” என அதி​முக ஐடி விங் மாநிலச் செய​லா​ளர் ராஜ் சத்​யன் போட்ட பதிவு அதி​முக வட்​டாரத்​தில் பேசுபொருளாகி இருக்​கிறது.
தனது பதி​வில், அதி​முக இரண்​டு​பட்டு நிற்க காரண​மானவர்​களை​யும் சாடி இருந்த ராஜ் சத்​யன், என்ன காரணத்​தி​னாலோ சில மணி நேரத்​திலேயே தனது பதிவை நீக்​கி​விட்​டார். இதுகுறித்து அவரை நாம் தொடர்பு கொண்​ட​போது, “கட்சி மீண்டும் செல்​வாக்​கான நிலைக்கு வரவேண்​டும் என்​ப​தற்​காக அந்​தப் பதிவை போட்​டேன். மற்​றபடி யார் மீதும் பழிசொல்​வது நோக்கமில்​லை” என்று முடித்​துக் கொண்​டார்.
இது விஷய​மாக நம்​மிடம் பேசிய ஐடி விங் பொறுப்​பாளர்​களோ, “ஜெயலலிதா காலத்​தில் யாரும் தனிக்​காட்டு ராஜா​வாக ஆட்​டம்​போட முடி​யாது. அப்​படி ஆட்​டம் போட்ட சிலரை அட்​ரஸே இல்​லாமல் செய்​தவர் ஜெயலலி​தா.
ஆனால், இப்​போது அப்​படி இல்​லை. பழனி​சாமி கட்​சிக்கு விசு​வாச​மான அனை​வரை​யும் அரவணைத்து கட்​சியை கொண்டு செலுத்த நினைக்​கிறார். ஆனால், மாவட்ட பொறுப்​பாளர்​களில் பெரும்​பகு​தி​யினர் குறுநில மன்​னர்​கள் போல் செயல்​படு​கிறார்​கள். அதனால் கட்​சிக்​குள் புதி​ய​வர்​களின் வரு​கையே கிட்​டத்​தட்ட இல்​லாமல் போய்​விட்​டது. முன்​னாள் அமைச்​சர்​கள் உதயகு​மார், வேலுமணி, விஜய​பாஸ்​கர் போன்​றவர்​கள் எல்​லாம் 20 வயதில் கட்​சிக்​குள் வந்​தவர்​கள். ஆனால், இன்​றைக்கு அப்​படி யார் வரு​கிறார்​கள்? இளைஞர் களுக்​காகவே ஆரம்​பிக்​கப்​பட்ட இளைஞர் – இளம்​பெண்​கள் பாசறை​யிலேயே ஐம்​பது வயதைக் கடந்​தவர்​கள் தான் உறுப்​பினர்​களாக இருக்​கிறார்​கள்.
புதி​தாக தொடங்​கப்​பட்ட விளை​யாட்டு அணிக்கு மாநிலச் செய​லா​ளரே இல்​லை. கட்​சி​யில் இருக்​கும் 82 மாவட்​டச் செய​லா​ளர்​களில் 10 பேர் கூட இளைஞர்​கள் இருக்க மாட்​டார்​கள். தற்​சம​யம் கட்​சி​யில் 20 சதவீதம் பேர் இளைஞர்​கள் இருக்​கிறார்​கள். அவர்​களுக்​கெல்​லாம் பொறுப்​பு​களைக் கொடுத்து செயல்​பட​விட்​டால் தான் அவர்​கள் இன்​னும் 20 சதவீதம் இளம் சகாக்​களை உள்ளே கொண்டு வரு​வார்​கள்.