Home செய்திகள் தேசிய செய்திகள் ‘துரந்தர்’ படத்​தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்​டும் இறங்கிய தாவூத் கும்​பல்

‘துரந்தர்’ படத்​தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்​டும் இறங்கிய தாவூத் கும்​பல்

மும்பை: ஜூன் 2 –
பாகிஸ்​தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதர​வுடன் தீவிர​வாத சதி திட்​டங்​களில் ஈடு​பட்ட சிலரை டெல்லி போலீ​ஸார் கைது செய்து அவர்​களது சதியை முறியடித்​தனர். இவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் சில அதிர்ச்சி தகவல்​கள் வெளியாகியுள்​ளன.
துரந்​தர் என்ற இந்​திப் படம் சமீபத்​தில் வெளி​யாகி வசூலை குவித்தது. இந்த திரைப்​படத்​தில் படே சாப்​பாக வரும் கதாபாத்திரம் மும்பை தாதா தாவூத் இப்​ராகிம் மரண படுக்கையில் இருப்​பது போல் காட்​டு​கிறது. இது தாவூத் கும்பலுக்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தாவூத் இப்ராகிம் இன்​னும் உயிருடன் இருக்​கிறார் என்​பதை மும்பை மக்​களுக்கு நிரூபிக்க வேண்​டிய அவசி​யம் அவர்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.
அதனால் தங்​கள் இயக்​கத்​துக்கு மும்​பை​யில் இருந்து ஆட்​களை சேர்க்​கும் நடவடிக்​கை​யில் தாவூத் கும்​பல் ஈடு​பட்​டது. அவர்களுக்கு பயிற்சி மற்​றும் ஆயுதங்​கள் வழங்​கும் பொறுப்பு பாகிஸ்தானின் ஐஎஸ்​ஐ.,​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. தீவிர​வாத சதி​களை நிறைவேற்​றும் பொறுப்பு துப்​பாக்கி சுடு​வ​தில் கில்லாடியான முன்னா ஜிங்​காதா என்​பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்​பை​யில் தேர்வு செய்​யப்​பட்ட இளைஞர்​களிடம், தங்​கள் சதி திட்​டத்​திற்​கான உண்​மை​யான காரணம் தெரிவிக்​கப்​பட​வில்​லை. மும்பை பாந்ரா பகு​தி​யில் உள்ள கரீப் நகரில் சட்​ட​விரோத​மாக கட்​டப்​பட்ட மசூதி ஒன்று புல்​டோசர் மூலம் இடிக்​கப்​பட்ட சம்பவத்துக்கு பழி​வாங்​கு​வதற்​காக தீவிர​வாத சதி திட்​டம் வகுக்கப்​படு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் இந்த கும்​பலின் சதி திட்​டங்​களை டெல்லி போலீ​ஸார் முறியடித்​து, தீவிர​வாத சதி திட்​டங்​களின் பின்​னணி​யில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ மற்​றும் தாவூத் கும்​பல் இடையே​யான தொடர்​பை வெளிச்​சத்​துக்​கு கொண்​டு வந்​துள்​ளனர்​.