Home செய்திகள் தேசிய செய்திகள் பூகம்ப பகுதியில் இந்தியா உதவி கரம்

பூகம்ப பகுதியில் இந்தியா உதவி கரம்

புதுடெல்லி / கராகஸ்: ஜூன் 27-
வெனிசுலா பூகம்​பத்​தில் இது​வரை 589 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்​களில் 35 டன் நிவாரணப் பொருட்​களை வெனிசுலா​வுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது.
இதன்​காரண​மாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டுள்​ளன. தலைநகர் கராகஸில் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாது​காப்பு படைப் பிரிவு​களும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு உள்​ளன. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், தென்​அமெரிக்க நாடு​களின் ராணுவ வீரர்​களும் மீட்​புப் பணி​யில் இணைந்​துள்​ளனர்.
இது​வரை 589 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்டுள்​ளன. 4,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறுகின்​றனர். பூகம்​பம் நேரிட்ட பகு​தி​களில் காணா​மல் போனவர்​கள் குறித்த விவரங்​களை பதிவு செய்ய வெனிசுலா அரசு சார்​பில் சிறப்பு இணை​யதளம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த இணை​யத்​தில் 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்லை என்று பதி​விடப்​பட்டு உள்​ளது. அவர்​கள் கட்​டிட இடி​பாடு​களில் சிக்​கி​யிருக்​கலாம் என்று மீட்​புப் படை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.
வெனிசுலாவின் மொத்த மக்கள் தொகை 2.86 கோடி. இதில் சுமார் 70 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கராகஸில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்​தி​யா​வின் ‘ஆபரேஷன் அமிஸ்​டாட்’ – இந்நிலையில், பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவுவதற்​காக இந்​தி​யா​ சார்​பில் ‘ஆபரேஷன் அமிஸ்​டாட்’ தொடங்​கப்​பட்டு உள்​ளது. (‘அமிஸ்டாட்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பு’). இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘இந்​திய விமானப் படை​யின் சி17 ரக சரக்கு விமானங்​கள் மூலம் மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​கள் உட்பட 35 டன் நிவாரணப் பொருட்​கள் வெனிசுலா​வுக்கு அனுப்​பப்​பட்டுள்​ளன’ என்று தெரி​வித்​துள்​ளார்.