Home செய்திகள் உலக செய்திகள் ‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா

‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா

வாஷிங்டன்: ஜூன் 27-
ஈரான் போர் உள்​ளிட்ட சவால்​களுக்கு மத்​தி​யில், உலகப் பொருளாதார வளர்ச்சி​யின் முக்​கிய உந்​துசக்​தி​யாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரு​வ​தாக சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.
சர்​வ​தேச பொருளா​தார மந்​தநிலை மற்​றும் உலகளா​விய எரிசக்தி சந்​தைகளில் ஏற்​பட்​டுள்ள இடையூறுகளின் தாக்​கம் இந்தி​யா​விலும் எதிரொலித்தது. எனினும் நாட்​டின் வலு​வான உள்நாட்​டுத் தேவை காரண​மாக இந்​தி​யப் பொருளா​தா​ரம் தொடர்ந்து மீள்​திறனுடன் செயல்​பட்டு வரு​கிறது.
இந்​நிலை​யில், வாஷிங்​டனில் நடை​பெற்ற ஐஎம்எஃப் செய்தியாளர்​கள் சந்​திப்​பில், அதன் செய்​தித் தொடர்​புத் துறை இயக்​குநர் ஜூலி கோசாக் கூறிய​தாவது: ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகப் பொருளா​தா​ரத்​தில் ஏற்​பட்​டுள்ள கடும் சவால்களுக்கு இடை​யிலும், இந்​தி​யா​வின் பொருளாதாரம் வலுவான வளர்ச்​சி​யைக் கண்டு வரு​கிறது.
குறிப்​பாக, இந்​தி​யா​விற்​குள் இருக்​கும் வலு​வான உள்​நாட்​டுத் நுகர்​வுத் தேவை இதற்​குப் பக்​கபல​மாக அமைந்​துள்​ளது. நடப்பு 2026-27 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என்ற எங்​கள் கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது. இந்த 6.5 சதவீத வளர்ச்சி உலகப் பொருளா​தா​ரச் சூழலில் மிக​வும் வலு​வான ஒன்​று. இவ்​வாறு ஜூலி கோ​சாக் தெரி​வித்​தார்.

வல்​லரசு நாடு​களின் பொருளா​தா​ரம் தடு​மாற்​றத்​தைச் சந்​தித்து வரும் வேளை​யில், போர் மற்​றும் எரிசக்தி தட்​டுப்​பாடு போன்ற இக்​கட்​டான சூழல்​களை​யும் திறம்பட எதிர்​கொண்டு இந்​தியா தனது பொருளா​தார ஸ்திரத்​தன்​மை​யைத் தக்​க​வைத்​துக் கொண்டுள்​ளது. இதன் மூலம், உலகப் பொருளா​தா​ரத்தை முன்னோக்​கிச் செலுத்​தும் ஒரு முதன்மை நா​டாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது உலக அரங்​கில் அதன் முக்​கி​யத்​து​வத்​தை மேலும்​ அதிகரித்துள்ளது.