
புதுடெல்லி, ஜூலை 9- நாட்டில் 70 வயதை கடந்த ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.5 லட்சம் வரை உயர் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடிகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 43 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தனது 172-வது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024ம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறலாம் எனறு விரிவுப்படுத்தினார். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் மூத்த குடிமக்களும் பயன்பெறலாம். ஆனால், வேறு எதாவது அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் வைத்திருந்தால், எந்த திட்டம் வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்து பயன்பெற வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருக்கும் குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனி ரூ.5 லட்ச மருத்துவக் காப்பீடு டாப் அப் வழங்கப்படுகிது ஆனால், இந்த டாப் அப்பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற இயலாது. இதில் அந்த முதியவர் மட்டுமே பயன்பெற முடியும்.PMJAY, ஆயுஷ்மான் பாரத் ஆகிய செல்போன் செயலி மூலம் பதிவு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு பெற செய்துகொள்ளலாம். பதிவு செய்த மூத்த குடிமக்களுக்கு தனி மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.


















