
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார். வக்பு (திருத்த) சட்டம், 2025-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நாட்டின் முதலாவது மாநில அளவிலான வக்பு வாரியம் ஆகும். இது குறித்து உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ”வக்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தான் ம.பி. வக்பு வாரியத்தில் 2 இந்துக்கள் சேர்க்கப்பட்டனர். வக்பு சொத்துகளை சிறப்பாக பராமரிக்கவே இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது” என்றார்.



















