Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க விமானப்படை விமானங்களை தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் தகவல்

அமெரிக்க விமானப்படை விமானங்களை தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் தகவல்

டெஹ்ரான், ஜூலை 18- அமெரிக்க விமானப்படைக்கு சொந்​த​மான எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மற்​றும் போர் விமானங்​களை தாக்கி அழித்​த​தாக ஈரான் கூறி​யுள்​ளது.புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தி​யில் எண்ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்நாட்​டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6 நாட்​களாக கடும் தாக்குதலை மேற்​கொண்டு வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற தாக்​குதலில் ஈரானின் பந்​தர் அப்பாஸ் பகு​தி​யில் பாலங்​கள், ரயில் நிலை​யங்​கள், மின் நிலையங்​கள் போன்ற உள்​கட்​டமைப்​பு​கள் அழிக்​கப்​பட்​டன. ஈரான்​ஷர் ராணுவ தளத்​தில் நடத்​தப்​பட்ட தாக்​குதலில் 7 ஈரான் வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக வளை​குடா நாடு​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வருகிறது. ஈரானின் 3 ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழித்​த​தாக ஜோர்​டான் கூறியது. இந்​நிலை​யில் ஈரான் ராணுவம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: ஜோர்​டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறி​வைத்து ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்தினோம். இதில் அமெரிக்​கா​வின் எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மற்​றும் போர் விமானங்​கள் பல சேதம் அடைந்​தன. ஜோர்​டான் மக்​களும், முஸ்​லிம்​களுக்கு எதி​ராக செயல்​படும் அமெரிக்​கர்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்த வேண்​டும். சிரி​யா​வில் அல்​-டன்ஃப் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை​யும் தாக்​கினோம். ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. அமெரிக்காவின் தாக்​குதல் தொடரும் வரை, இங்கிருந்து எரிபொருள் கப்​பல்​கள் எது​வும் கடந்து செல்ல அனு​ம​திக்க மாட்​டோம்​. இவ்​வாறு ஈரான்​ ராணுவம்​ தெரிவித்துள்ளது.