
சென்னை: செப்.15-
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் றியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! ‘தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!’ என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து, தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில், சமூகநீதியில், மாநில உரிமையில், தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார் ”இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.













