
புதுடெல்லி: ஜூலை 11-
இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஆக்லாந்தில் உள்ள அரசாங்க மாளிகையில் கோலாகலமான வரவேற்பு பெற்றதில் பெருமை கொள்கிறேன். பாரம்பரிய மாவோரி போவிரி சடங்கு, நியூசிலாந்தின் வளமான பாரம்பரியம் மற்றும் மரபுகளின் நெகிழ்ச்சியான பிரதிபலிப்பாக இருந்தது.
எனது இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறவை மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; நாம் அமைதிக்காக வாதிட்டு, அதன் மூலம் உலக நல்வாழ்வை நோக்கிப் பணியாற்றி, அமைதியான சூழலை உருவாக்க முடியும். இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்துக்கு வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நியூசிலாந்து மக்கள் இந்தியா மீது கொண்டுள்ள பாசத்தைக் காண்பது, என் இதயத்தைத் தொடும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாகும், அதற்காகவும் நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். இது நமது உறவில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


















