Home விளையாட்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை

புதுடெல்லி, ஆக. 8- ஆட​வருக்​கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இந்​தி​யாவை சேர்ந்த நடு​வர்​கள், தொழில்​நுட்ப அதி​காரி​கள் இடம் பெற​வில்​லை. இதனால் முன்​னாள் அதி​காரி​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர். சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் சார்​பில் ஆடவருக்​கான உலகக் கோப்பை ஹாக்​கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடு​வரோ அல்​லது தொழில்​நுட்ப அதிகாரியோ இடம்​பெற​வில்​லை. 1998-ம் ஆண்டு உட்​ரெக்ட் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்​திய அதி​காரி​களின் பங்​களிப்பு இல்​லாமல் உலகக் கோப்பை ஹாக்​கித் தொடர் நடை​பெறு​வது இதுவே முதல்​முறை​யாகும். ஐரோப்​பிய நாடு​களைச் சேர்ந்தவர்களே நடு​வர் குழு​வில் அதி​கம் இடம் பெற்​றுள்​ளனர். இதற்கு முன்​னர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்​தியா சார்​பில் அமர்​ஜித் சிங் பாவா (1990), தர்​லோக் சிங் புல்​லர் (1994), சதீந்​தர் ஷர்மா (2002, 2006, 2010), ஆர்​.​வி. ரகு பிர​சாத் (2010, 2014, 2018, 2023) ஆகிய 4 பேர் நடு​வர்​களாகப் பணி​யாற்​றி​யுள்​ளனர். இதில் ரகு பிர​சாத் 200 சர்​வ​தேச போட்​டிகளில் நடு​வ​ராக பணி​யாற்றிய முதல் ஆசிய நடு​வர் என்ற பெரு​மையை பெற்​றார். அவர், கடந்து ஆண்டு ஓய்வு பெற்​றிருந்​தார். ரகு பிர​சாத் கூறும்​போது “முந்​தைய உலகக் கோப்​பை, ஒலிம்​பிக், புரோ லீக் மற்​றும் பிற சர்​வ​தேசப் போட்​டிகளில் வெளிப்​படுத்​தப்​படும் திறமையை மதிப்​பீடு செய்தே எஃப்​.ஐ.எச் நடு​வர் குழு பெரிய போட்​டிகளுக்​கான அதி​காரி​களைத் தேர்ந்​தெடுக்​கிறது. நிலை​யான திறமையே பிர​தான அளவு​கோலாக இருக்​கும்” என்​றார். பல ஒலிம்​பிக் மற்​றும் உலகக் கோப்​பைகளில் பணி​யாற்​றிய சதீந்​தர் ஷர்மா கூறும்​போது, “பா​வா, புல்​லர் ஆகியோ​ருக்கு பிறகு, நானும் ரகு​வும் அந்​தப் பாரம்​பரி​யத்​தைத் தொடர்ந்​தோம். ஐரோப்​பிய அதி​காரி​களுக்கு மத்​தி​யில் எங்​களை நிலைநிறுத்​து​வது எளி​தாக இருந்​த​தில்​லை. 2008-ம் ஆண்டு பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ஒலிம்​பிக் போட்​டிக்கு இந்​திய ஆடவர் அணி தகுதி பெற​வில்லை என்​றாலும், நான் மட்​டுமே இந்​தி​யா​வின் பிர​தி​நி​தி​யாக அங்கு அதி​காரி​யாகப் பங்​கேற்​றேன்.