Home செய்திகள் தேசிய செய்திகள் எதிர்க்கட்சிகள் அமளி – முதல் நாளே பாராளுமன்றம் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி – முதல் நாளே பாராளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜூலை 20 –
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடியது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே கேள்வி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் மக்களவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சியினர் அமளியை தொடர்ந்து மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால் இரு அவைகளிலும் அனல் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.