Home செய்திகள் தேசிய செய்திகள் ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க உத்தரவு

ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க உத்தரவு

சென்னை: ஏப்ரல் 27-
ஐஸ்​கிரீமில் சுவையூட்​டிகள் போன்ற கலப்​படங்​களைத் தடுக்​கும் வகை​யில், ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்​காணிக்க அதி​காரி​களுக்கு உணவு பாது​காப்​புத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.தமிழகத்​தில் கோடை வெயில் சுட்​டெரிக்​கத் தொடங்​கி​யுள்ள நிலை​யில், குளிர்​பானங்​கள் மற்​றும் ஐஸ்கிரீம்​களின் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் உரிய உரிமம் இன்றி ஐஸ்​கிரீம் தயாரிப்​பது, லாப நோக்​கில் கலப்​படங்​களைச் செய்​வது போன்ற முறை​கேடு​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.
இதனால் குழந்​தைகள் முதல் பெரியோர் வரை அனை​வரது உடல்​நல​மும் பாதிக்​கும் அபாயம் இருக்​கிறது. இதை கருத்​தில்​கொண்​டு, மாநிலம் முழு​வதும் உணவுப் பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடுபட உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.
அதன்​படி இயற்கை சர்க்​கரைக்கு மாறாக தரம் குறைந்த சுவையூட்​டிகள், செயற்கை நிறமிகள் மற்​றும் ஆபத்​தான வேதிப்​பொருட்​களை கலப்​பது, குளிர்​பானங்​களில் பாஸ்​போரிக் அமிலம் மற்​றும் சலவைத்​தூள் கூட்​டுப் பொருட்​களைச் சேர்ப்​பது, தயாரிப்​புக்கு சுகா​தா​ரமற்ற நீரைப் பயன்​படுத்​து​வது போன்​றவற்​றைத் தடுக்​கும் பொருட்​டு, மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​களுக்கு ஐஸ்​கிரீம், குளிர்​பான உற்​பத்தி நிறு​வனங்​களில் தொடர் சோதனை​களை மேற்​கொள்​ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.