திருச்செந்தூர் கோயிலில் 2 திரிசுதந்திரர்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி: ஜூலை 28 – ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​வதற்கு பக்​தர்​களிடம் முறை​கே​டாக பணம் பெற்​றது தொடர்​பாக இரண்டு திரிசுதந்​திரர்​கள் மீது கோயில் நிர்​வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்​துள்​ளது.
இது தொடர்​பாக கோயில் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கடந்த 24-ம் தேதி ஆடி அமா​வாசையன்று பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. இதைப் பயன்​படுத்தி திரிசுதந்​திரர் பாபு நாராயணன் என்​பவர் பணம் பெற்​றுக்​கொண்​டு, 60 வயது பூர்த்​தி​யடை​யாத 5 நபர்​களை முதி​யோர் முறை வரிசைக்​குள் முறை​கே​டாக அனுப்​பி​யுள்​ளார்.
இதனால் மற்ற பக்​தர்​களும் அவ்​வழி​யாக நுழைய முற்​பட்​ட​தால் மூத்த குடிமக்​கள் முறை வரிசை​யில் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. மூத்த குடிமக்​கள் தரிசனம் செய்ய அசவு​கரி​யம் ஏற்​பட்​டது.
பக்​தர்​களிடம் முறை​கே​டாக பணம் பெற்​றுக்​கொண்​டு, கோயில் நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​திய திரிசுதந்​திரர் பாபு நாராயணன் மறு உத்​தரவு வரும் வரை கோயி​லில் எவ்​வித பூஜை கைங்​கரி​யங்​களும் செய்ய தடை விதிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
இதே​போல, திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ரூ.2 ஆயிரம் இருந்​தால் 10 நிமிடத்​தில் சுவாமி தரிசனம் செய்​ய​லாம் என ஒரு​வரது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் தகவல் வெளி​யானது.இதனடிப்​படை​யில், திரிசுதந்​திரர் பாலசுப்​பிரமணி​யம் என்​பவர் மீது விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டது. அவரது விளக்​கம் ஏற்​புடைய​தாக இல்​லாத​தா​லும், கோயிலுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்​தும் செயலில் அவர் ஈடு​பட்​ட​தா​லும், மறு உத்​தரவு வரை அவர் பூஜை கைங்​கர்​யம் செய்ய தடை விதித்து கோயில் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.