Home மாவட்டங்கள் பெங்களூர் முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது?

முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது?

சென்னை: மே 28-
தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்​ளு​படி செய்​திருக்​கிறது தவெக அரசு. ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யில் சொன்​னபடி விஜய் செய்​ய​வில்​லையே என விவ​சா​யிகளும் விவ​சாய சங்​கங்​களும் போர்க்​கொடி தூக்கி இருக்​கின்​றன.
பயிர்க் கடன் தள்​ளு​படி என்​பது திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் ஓட்டுக்​காக விவ​சா​யிகளை வளைக்​கும் ஒரு உத்​தி. அதேசம​யம், இந்த ‘தள்​ளு​படி’ விவ​காரத்​துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவ​சா​யிகளுக்கு கடன் வழங்​கும் தொடக்க வேளாண்​மைக் கூட்​டுறவு கடன் சங்​கங்​கள் இந்​தியா முழு​வதும் சுமார் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மாக இருக்​கின்​றன.
இதில்​லாமல், சுமார் 900 மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கி​கள் இருக்​கின்​றன. தமிழகத்​தில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்​கங்​களும் 24 மத்​தி​யக் கூட்​டுறவு வங்​கிகளும் உள்​ளன. இவற்​றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரைக்​கும் விவ​சாயக் கடன்கள் வழங்​கப்​படு​கின்​றன.
வாஜ்​பாய் ஆட்​சி​யில் கடன் சங்​கங்​களும் மத்​திய கூட்​டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்​கடி​யில் தத்​தளித்​தன. அடுத்து வந்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் வைத்​தி​ய​நாதன் கமிட்டி அளித்த சிபாரிசின் படி சுமார் 13 ஆயிரம் கோடியை வங்கி மறுசீரமைப்பு நிதி​யாக மத்​திய அரசு அளித்​தது. (இதில் சுமார் 1,000 கோடி தமிழகத்​துக்​கான நிதி). ஆனால், இந்த நிதியை பெறவேண்​டு​மா​னால் மாநில அரசுகள் நபார்டு வங்​கி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​திட வேண்​டும் என நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.
வங்கி நிர்​வாகத்​தில் அரசி​யல்​வா​தி​களின் தலை​யீடு, கடன் தள்​ளு​படி உள்​ளிட்ட விஷ​யங்​களுக்கு செக் வைத்​த​தால் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்​தார் அப்​போதைய முதல்​வர் ஜெயலலி​தா. இந்த நிலை​யில் செக் ஷன் 35 (ஏ)-ன் படி சிவகங்கை மத்​தி​யக் கூட்​டுறவு வங்​கியை முடக்​கியது ரிசர்வ் பேங்க். இது தனது தொகு​திப் பிரச்​சினை என்​றாலும், “இது ரிசர்வ் பேங்க் எடுத்த நடவடிக்​கை” என்று சொல்லி ஒதுங்​கி​னார் சிதம்​பரம். இதையடுத்​து, “ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்​தி​னால் வங்கி மீண்​டும் செயல்​பாட்​டுக்கு வரும்” என்​றது நபார்​டு. ஆனால் ஜெயலலி​தா, ரூ.13 கோடியை மட்​டும் செலுத்த சம்​ம​தித்​தார்.