Home செய்திகள் தேசிய செய்திகள் விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்

விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்

விசாகப்பட்டினம்: மே 13-
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.
விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள் மிக​வும் பிரசித்தி பெற்​றவை​யாகும். வார இறுதி நாட்​கள், பண்​டிகை நாட்கள் மற்​றும் கோடை விடு​முறை​யில் இங்கு அதிக சுற்​றுலாப் பயணி​களை காணலாம்.
இந்​நிலை​யில் இப்​பகு​தியை மேலும் அழகாக்க, விசாகப்​பட்​டினம் நகர வளர்ச்சி கழகம் (விஎம்​ஆர்​டிஏ) இங்கு 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் சிலை அமைக்க முடிவு செய்​தது. இதற்​கான பணி​கள் விரை​வாக நடை​பெற்​று, சமீபத்​தில் அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி திரிசூலத்தை பொது​மக்களின் பார்​வைக்கு கொண்டு வந்​தார். மலை உச்​சி​யில் உள்ள இந்த திரிசூலத்தை நகரில் எந்த இடத்​தில் இருந்​தும் காண முடியும்.
இரவில் எல்​இடி விளக்கு வெளிச்​சத்​தில் திரிசூலம் ஜொலிக்​கிறது. 65 அடி உயரம் கொண்ட திரிசூலத்​தில் உடுக்கை மட்​டும் 18 அடி அகல​மும், 10 அடி உயர​மும் கொண்​டுள்​ளது. ரோப்​-வே உள்ள இந்த மலைக்கு தற்​போது சுற்​றுலா பயணி​கள் அதி​கம் வர தொடங்கி விட்​டனர். சுமார் 8 மாத​மாக திரிசூலம் கட்​டு​மானப் பணி​கள் நடந்​தன. சமீபத்​தில் இதன் திறப்பு விழா நடந்து முடிந்துள்​ளது.
இது குறித்து ஆந்​திர கல்வி அமைச்​சர் நாரா லோகேஷ் நேற்று சமூக வலை​தளத்​தில், “குஜ​ராத்​தில் உள்ள சோம்​நாத் கோயில் புனரமைக்​கப்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை நாம் கொண்டாடும் இந்த வேளை​யில், ஆந்​திர மாநிலம், விசாகப்பட்டினத்​தில் உள்ள கைலாசகிரி​யில் 65 அடி உயர திரிசூலம் அமைக்​கப்​பட்​டிருப்​பது ஆந்​தி​ரா​வுக்கு பெருமை தரும் விஷய​மாகும். இது நமது இந்​திய கலாச்​சா​ரத்​தை​யும், ஆன்மீகத்தை​யும் நாட்​டுக்கு எடுத்​துரைக்​கிறது” என்​று குறிப்பிட்டுள்​ளார்​.