
சண்டிகர்: ஆக. 17-
சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும் அவரது மனைவியும், எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாந்தேட் குருத்வாராவில் கடந்த வியாழக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது, ‘நிஹாங்’ பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘கிர்பான்’ (சீக்கியர்களின் புனிதவாள்) கொண்டு தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் சுக்பீர் சிங் பாதலின் வலது கையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.













