Home செய்திகள் தேசிய செய்திகள் பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு

பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு

புதுடெல்லி: மார்ச் 11-
கடந்த ஆண்டு இந்​திய விமானப்​படை நடத்​திய ‘ஆபரேஷன் சிந்​துார்’ தாக்​குதலில் பாகிஸ்​தானின் முக்​கிய முரித் விமானப்​படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்​வியடைந்த நிலை​யில், முழுமையாக இடித்​துத் தரைமட்​ட​ம் ஆக்​கப்பட்​டுள்​ள​து செயற்கைக் ​கோள் புகைப்​படம் மூலம் அம்​பல​மாகி​யுள்​ளது.
பாகிஸ்​தானின் சக்​வால் பகு​திக்கு அருகே அமைந்​துள்​ளது முரித் விமானப்​படைத் தளம். இது, அந்​நாட்​டின் மிக முக்​கிய​மான கட்டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மைய​மாக விளங்​கியது.
கடந்த 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்​திய விமானப்​படை நடத்​திய துல்​லி​ய தாக்​குதலில் பாகிஸ்​தானின் 10 விமானப்​படைத் தளங்​கள் நிலைகுலைந்​தன. அதில் முரித் தளமும் ஒன்​று. தாக்​குதலுக்​குப் பிறகு அத்​தளம் தார்​பாய்​களால் மூடப்​பட்​டு, ரகசி​ய​மாகப் பழுது​பார்க்​கப்​பட்டு வந்​தது.