
புதுடெல்லி: மார்ச் 12-
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர் விலை கடந்த 7-ம் தேதி உயர்த்தப்பட்டது. டெல்லியில் மானியம் இல்லாத சிலிண்டருக்கு (14.2 கிலோ) ரூ.913-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையும் ரூ.1,883-ஆக அதிகரித்தன.
இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் (எல்பிஜி) பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஈரான்-
இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருவதால் அங்கிருந்து வரும் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சமையல் காஸ் விநியோகம் முற்றிலும் குறைந்துவிட்டதால், எல்பிஜி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.நமது நாட்டின் மொத்த எல்பிஜி தேவையில் சுமார் 60% அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயானது மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.தற்போது போர் மூண்டுள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயக்கப்படும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளதால் அந்தக் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நெருங்கியுள்ளது.நமது
நாட்டில் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் நுகர்வு கடந்த பத்தாண்டுகளில் மிகவும் உயர்ந்துள்ளது. 2016- 17ம் ஆண்டில் 21.61 மில்லியன் டன்னில் இருந்து நிதியாண்டு 2025ல் 31.32 மில்லியன் டன்களாக நுகர்வு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் எல்பிஜி பயன்பாடு 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 43% அதிகரித்துள்ளது.

















