Home செய்திகள் தேசிய செய்திகள் திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ நகை அணிந்து வந்த பக்தர்

திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ நகை அணிந்து வந்த பக்தர்

திருப்பதி, மார்ச் 14- தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவராக இருப்பவர் விஜயகுமார். நகை பிரியரான இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வந்தார். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த விஜயகுமார் கோவிலில் இருந்து வெளியே வந்தார். அவரது உடல் முழுவதும் 4 கிலோ நகைகளை அணிந்து இருந்தார். இதேபோல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர சோனி குடும்பத்தினர் 4 பேர் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஏழுமலையான் உருவம் பதித்த தலா ½ கிலோ நகைகள் வீதம் 4 கிலோ நகைகளை அணிந்து வந்தனர். இதனை பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். திருப்பதியில் நேற்று 67,264 பேர் தரிசனம் செய்தனர். 29,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.