
துபாய்: மார்ச் 16-
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ஆவேச தாக்குதலால் துபாய் உருக்குலைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையம் அருகே உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு தீ பற்றி எரிந்தது. இதன் எதிரொலியாக விமான நிலையமும் தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இதன் மூலம் அமீரகம் மிக அதிக அளவில் இலக்கு வைக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான தாக்குதல்களை முறியடித்திருந்தாலும், இந்தத் தொடர் தாக்குதல்கள் வளைகுடாவின் மிக முக்கியமான வர்த்தக மையமான துபாயின் பயணப் போக்குவரத்தைப் பாதித்துள்ளன.
அமெரிக்க-இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் பதிலுக்கு ஈரான் வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வசதிகள் உள்ளிட்ட சிவிலியன் இடங்களை இலக்கு வைத்து வருகிறது. இதற்கிடையில், இந்த மோதல் தொடங்கியதில் இருந்து நான்கு பொதுமக்கள் மற்றும் இரண்டு ராணுவத்தினர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.. இதில் ராணுவத்தினர் இருவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இதனிடையே துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தீயை துபாய் தீயணைப்பு படைஅதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாக விரைந்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ்தளத்தில், “துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது. துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. பின்னர் அந்த அலுவலகம் வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலில், “விமான நிலையப் பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீதான தாக்கத்தால் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துபாய் சிவில் டிஃபென்ஸின் அவசரக்கால மீட்புப் குழுக்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், எந்தவித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் கூறியிருந்தனர். குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள்.
துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தொடர்பான அச்சுறுத்தல் பதிவாவது இது முதல் முறையல்ல என்று குறிப்பிட்ட அதிகாரிகள், பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





















