
பெங்களூரு: மே 6 –
வாடகை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த 23 வயது மென்பொருள் பொறியாளரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோ எடுத்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இளம் பெண் 9 மாதங்களுக்கு முன்பு கருடாச்சார் பாளையாவிற்கு குடிபெயர்ந்திருந்தார். ஏப்ரல் 29 அன்று, காலை சுமார் 9.30 மணியளவில், அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து ஒரு இளைஞன் தனது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.இந்தச் சம்பவத்தால் அந்த இளம் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவிடுமோ என்று அவர் கவலைப்படுகிறார். மகாதேவபுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


















