Home செய்திகள் தேசிய செய்திகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி

மும்பை, ஜூன் 17- மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில் ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில், அந்தப் பெண்​ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மதமாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்ள சம்​பவம் நடந்​துள்​ளது. அந்தப் பெண்​ணின் கைகளை பிடித்​துக் கொண்டு முஸ்​லிம் மதச்சடங்​கு​களைச் செய்​யும் வீடியோ​வும் வெளி​யாகி​யுள்​ளது. அதில் அந்​தப் பெண் என்னை விட்​டு​விடுங்​கள் என்று கதறு​வதும் பதி​வாகி​யுள்​ளது. இந்த சம்​பவம் நடந்​ததை தாமத​மாக அறிந்து பெண்​ணின் கணவர் கடந்த 14ம் தேதி புகார் அளித்​ததை அடுத்து இந்த சம்​பவம் தற்​போது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. போலீ​ஸார் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் நிலம் வாங்க விருப்​பம் தெரி​வித்து சம்​பந்​தப்​பட்ட பெண்​ணின் பள்ளி நண்​பர் அய்​யாஸ் தாஜ் மதா​ரே, என்​பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்​திக்க அழைத்​துள்​ளார். பிப்​ர​வரி 8-ம் தேதி ஒரு ஓட்​டலில் நடந்த சந்​திப்​பின்போது, அய்​யாஸ் அந்​தப் பெண்​ணுக்​குக் கொடுத்த குளிர்​பானத்​தில் போதை மருந்து கலந்​துள்​ளார். போதை மருந்​தால் பெண் மயங்​கியதும் அவரை பாலியல் வன்​கொடுமை செய்து அதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். மேலும், அந்த காட்​சிகளை சமூக வலை ​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாக மிரட்டி கடந்த சில மாதங்​களில் அந்​தப் பெண்​ணிடம் இருந்து சுமார் ரூ.4 லட்​சம் வரை பறித்​துள்​ளார். இதில் தனது நண்​பர்க​ளை​யும் அய்​யாஸ் கூட்​டாளி​களாக சேர்த்துக் கொண்​டார். அந்​தப் பெண்​ணுக்கு பில்​லி, சூனி​யம் செய்து​விடு​வோம் என்​றும் அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி அய்​யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரும் சேர்ந்து அந்​தப் பெண்ணைக் கல்​மேஷ்வர் என்ற பகு​திக்கு கடத்​திச் சென்றுள்ளனர்.