
மும்பை, ஜூலை 2- இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெளிநாடுகளில் கடைசியாக ஆடிய 10 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் 3 இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்திலும், 2 இன்னிங்ஸில் சதமும் அடித்திருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனிடம் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 68 ரன்களையும், அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்களையும் எடுத்தனர். கடைசி நேரத்தில் சிவம் துபே 21 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சஞ்சு சாம்சனிடம் மீண்டும் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை தொடங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வதில் சில தடுமாற்றங்களை சந்தித்து வருவதாக தெரிகிறது. ஏனென்றால் கடைசியாக வெளிநாடுகளில் ஆடிய 10 இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் 5 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். ஒரே ஆண்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர்களின் பட்டியலில் ஏற்கனவே இணைந்திருந்தார் சஞ்சு சாம்சன்.





















