Home செய்திகள் தேசிய செய்திகள் 20ம் தேதி முதல் மழைக்கால கூட்டத் தொடர்

20ம் தேதி முதல் மழைக்கால கூட்டத் தொடர்

புதுடெல்லி: ​ஜூலை 13-
நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்த கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க ஜூலை 19-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது.
நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த கூட்​டத் தொடரில் பல்​வேறு பிரச்​சினை​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்டு உள்​ளன. கடந்த ஏப்​ரல் மாதம் மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​கான மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மூலம் மக்​கள்​தொகை அடிப்​படை​யில் மக்​கள​வைத் தொகு​தி​களை மறு​வரையறை செய்ய முடி​யும். மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் இந்த மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தோல்வி அடைந்​தன.
இந்​நிலை​யில், மழைக்​கால கூட்​டத் தொடரில் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாக்​களை மக்​களவை​யில் மீண்​டும் தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. கடந்த சில மாதங்​களில் திரிண​மூல் காங்​கிரஸ், ஆம் ஆத்​மி, சிவசேனா (உத்​தவ் அணி) கட்​சிகளைச் சேர்ந்த எம்​.பி.க்​கள், பாஜக​வுக்கு அணி மாறி உள்​ளனர். இதனால் மக்​களவை, மாநிலங்​களவை​யில் பாஜக​வுக்​குக் கூடு​தல் பலம் கிடைத்​திருக்​கிறது. இதர கட்​சிகளின் ஆதர​வோடு மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு வியூகம் வகுத்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.ஆனால், எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​களை குதிரை பேரம் மூலம் பாஜக இழுப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இதுதொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் முடிவு செய்​துள்​ளன. மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு வினாத்​தாள் கசிவைக் கண்​டித்து நாடு முழு​வதும் எதிர்க்​கட்​சிகள் பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தின. இந்த விவ​காரத்​துக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது.பிரதமர், முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் குற்ற வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்டு 30 நாட்​களுக்கு மேல் சிறை​யில் இருந்​தால் அவர்​களைப் பதவி நீக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.
இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்தது. “குற்ற வழக்குகளில் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யக்கூடாது. தற்காலிகமாக பதவி நீக்கலாம்” என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.