Home செய்திகள் தேசிய செய்திகள் எம்​எல்​ஏ-வை வாங்க ரூ.30 கோடிக்கு குதிரை பேரம்: பிஜேபி கடும் கண்​டனம்

எம்​எல்​ஏ-வை வாங்க ரூ.30 கோடிக்கு குதிரை பேரம்: பிஜேபி கடும் கண்​டனம்

ஸ்ரீநகர்: ஜூலை 13-
ஜம்​மு-​ காஷ்மீரில் தேசிய மாநாட்​டுக் கட்சி மற்​றும் காங்கிரஸ் கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது.
முதலமைச்​ச​ராக உமர் அப்​துல்லா பதவி​யேற்​றது முதலே, அம்மாநிலத்​திற்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்​கு​வது உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களில் மத்​திய அரசுக்​கும் ஜம்​மு- ​காஷ்மீர் அரசுக்​கும் இடையே மோதல்​கள் தொடர்ந்து நீடித்து வருகின்​றன.
இந்நிலையில், ஸ்ரீநகரின் ஹசரத்​பால் பகு​தி​யில் நேற்று முன்தினம் நடை​பெற்ற கட்சி நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் முதல்​வர் உமர் அப்​துல்லா பேசுகை​யில், ”ஜம்மு பகு​தி​யைச் சேர்ந்த எங்களது கட்சி எம்​எல்​ஏவை சந்​தித்த பா.ஜ.க. பொறுப்​பாள​ரும், உச்ச நீதி​மன்ற வழக்​கறிஞரு​மான ஒரு​வர், கட்சி மாறி​னால் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை பணம், அமைச்​சர் பதவி மற்​றும் ஜம்​மு- ​காஷ்மீருக்கு மாநில அந்​தஸ்து பெற்​றுத் தரு​வ​தாக ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.
மக்​களின் நம்​பிக்​கையை மிக மலிவானதாக அவர்​கள் நினைத்​துக் கொண்​டிருக்​கிறார்​கள். ரூ.100 கோடி கொடுத்​தா​லும் எங்​கள் கட்சி எம்​எல்​ஏ-க்​கள் தங்களை விற்க மாட்​டார்​கள்” என்று கூறி​யிருந்​தார்.
இது குறித்து பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி கூறும்போது, “ஜம்​மு-​ காஷ்மீர் முதல்​வர் உமர் அப்துல்லா மிக​வும் பொறுப்​பற்ற, கண்​டனத்​திற்​குரிய குற்றச்சாட்டைச் சுமத்​தி​யுள்​ளார். இதற்கு அவர் உடனடி​யாக ஆதா​ரம் தர வேண்​டும்; இல்​லை​யெனில் மன்​னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.