
புதுடெல்லி: ஜூலை 24-
இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு உலக நாடுகள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறார். பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பான விவகாரத்தில், இந்தியா உட்பட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
அனைத்து நாடுகளின் மீதான 10 சதவீத கூடுதல் வரிகள் முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, வர்த்தகச் சட்டத்தின் 301ம் பிரிவின் கீழ் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10 சதவீ வரி விதித்து அமெரிக்கா அறிவித்து உள்ளது. முன்னதாக, இந்தியா 12.5 சதவீத வரி விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறியதாவது: அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையைக் கொண்டுள்ளதுடன், அதை கடுமையாக அமல்படுத்துகிறது. நமது வர்த்தகப் பங்காளிகளும் அதையே செய்ய வேண்டிய நேரம் வெகுவாகக் கடந்துவிட்டது. மனித உரிமை மீறலாகவும், வர்த்தகத்தைச் சிதைக்கும் நடைமுறையாகவும் உள்ள இதைச் சரிசெய்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கு இன்றைய நடவடிக்கை முக்கியமான ஒன்றாகும்.













