
லக்னோ: செப்டம்பர் 9-
உத்தர பிரதேசம் ஜவுளி மாநாடு-2026 தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “உத்தர பிரதேசத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. குற்றம் மற்றும் ஊழல் எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மாநிலம் ஊரடங்கு, கலவரம், மாஃபியாக்கள் இல்லாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ₹50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளன. இதில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டில் வந்துள்ளன. மேலும் ₹7.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்த தயாராக உள்ளன.
65 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 14,000 லிருந்து 35,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மாநிலம் உபரி வருவாய் கொண்டதாக மாறியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனது அலுவலகமே இதனை நேரடியாக கண்காணிக்கிறது,” என அவர் தெரிவித்தார்.














