Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான அகிலேஷ், டிம்பிளின் ‘பிடிஏ’ வியூகம்

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான அகிலேஷ், டிம்பிளின் ‘பிடிஏ’ வியூகம்

டெல்லி: செப்.9
உத்தரப் பிரதேசம்: சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச அரசியலில் முக்கிய தலைவராக உருவெடுத்து, பாஜக அரசுக்கு எதிராக கடுமையான சவாலை விடுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில், இண்டியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது, அதில் சமாஜ்வாதி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றது. மாறாக, என்.டி.ஏ கூட்டணி 36 இடங்களையே பெற்றது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பின், அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதியின் வெற்றி, பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
2027-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், அகிலேஷுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். முதல்வர் யோகி ஆதித்யநாத் வலிமையான தலைவராக இருந்து வரும் நிலையில், தற்போதைய அரசு மீதான விமர்சனங்களுக்கு, என்.சி.ஆர்.பி வெளியிட்ட குற்றப் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறியுள்ளது. 2017-இல் சமாஜ்வாதி ஆட்சியின்போது தீவிரக் குற்றங்கள் 64,450 ஆக இருந்தது, 2024-ல் பாஜக ஆட்சியில் 85,647 ஆக உயர்ந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் 56,011-ல் இருந்து 66,398 ஆக அதிகரித்துள்ளன.இந்த தகவல்கள், உத்தரப் பிரதேச அரசியலில் அகிலேஷின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன.