Home செய்திகள் தேசிய செய்திகள் குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்

குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்

முர்ஷிதாபாத்: ஆக. 12-

மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் ஒரு​வன் தனக்கு உடலில் எரிச்​சல் ஏற்​படு​வ​தாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்​டம், பெல்​டாங்கா பகு​தி​யில் வசித்து வரும் 16 வயது சிறு​வன் இக்​பால், கடந்த ஒரு மாத​மாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்​களி​லேயே கழித்து வரு​கிறார்.தண்​ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல் முழு​வதும் எரிச்​சல் ஏற்​படு​வ​தாக​வும், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்​கொண்​டதைப் போல உணர்​வ​தாக​வும் கூறுகிறார். இதனால் குளத்​திலிருந்து வெளியேவர மறுத்து தொடர்ந்து தண்​ணீரிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.உடல் பரு​ம​னாக இருக்​கும் இக்​பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்​களில் மிதந்​த​படி காணப்​படு​கிறார். சில நேரங்​களில் ஒரு குளத்​திலிருந்து மற்​றொரு நீர்​நிலைக்​கும் அவர் செல்​வ​தாக அப்​பகுதி மக்​கள் தெரி​வித்​தனர்.சிறு​வனின் உடல்​நிலை குறித்து கவலை அடைந்​துள்ள அவரது பெற்​றோர், ஏற்கெனவே அவரை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்றதாகவும், ஆனால் அவரது உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட​வில்லை என்​றும் தெரி​வித்​தனர்.மேலும், நீண்​ட​கால சிகிச்​சைக்​கான செலவை தங்​களால் சமாளிக்க முடிய​வில்லை என்​றும், சிறு​வனுக்கு உரிய மருத்​துவ சிகிச்சை கிடைக்க உதவு​மாறும் அவர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.