Home விளையாட்டு மனம் திறக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

மனம் திறக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

தரம்சாலா, மே 13- ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு தரம்சாலாவில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிடம் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 210 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்​தகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​களும், பிரியன்ஷ் ஆர்யா 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும் விளாசினர். 211 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.கேப்​டன் அக்​சர் படேல் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்டரிகளு​டன் 56 ரன்​களும், டேவிட் மில்​லர் 28 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்​து​விட்ட டெல்லி அணிக்கு இது 5-வது வெற்​றி​யாக அமைந்​தது. 12 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 5 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது.பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்​சி​யான 4-வது தோல்வியாக அமைந்​தது. 11 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 6 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை பெற்று 4-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் எஞ்​சி​யுள்ள 3 ஆட்டங்களிலும் பஞ்​சாப் அணி வெற்​றிகளை குவித்​தாக வேண்டும் என்ற நெருக்​கடி​யான நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் பஞ்சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது: நான் சுற்றி வளைத்​துப் பேச விரும்​ப​வில்​லை. மீண்​டும் ஒரு​முறை பீல்​டிங் மற்​றும் பந்​து​வீச்சு தான் தோல்விக்​குக் காரண​மாக அமைந்​தது. இந்த ஆடு​களத்​தில் 210 ரன்​கள் என்​பது சிறந்த ஸ்கோர். பந்து ‘சீம்’ ஆன விதத்​தை​யும், சீரற்ற பவுன்ஸ் இருந்ததையும் வைத்​துப் பார்த்​த​போது, இந்த ஆடு​களத்தில் நாங்கள் கூடு​தலாக 30 ரன்​கள் சேர்த்​த​தாகவே கரு​தினேன்.