
சென்னை: ஏப்ரல் 4-
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் முதல் சுற்று முடிவில் 886 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ம் ஆண்டு உருவான தொகுதியாகும். இங்கு உருவானது முதலே ஸ்டாலின் தான் வென்று வருகிறார்.
இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் ஸ்டாலின் தான் ஜெயித்தார். 2011ம் ஆண்டு முதல் கொளத்தூரில் நடந்த முதல் தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமியை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்கடித்தார்.2016ம் ஆண்டு அதிமுகவின் ஜே.சி.டி பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்டு, சுமார் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2021: கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைக் காட்டிலும் சுமார் 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, தனது செல்வாக்கை நிரூபித்தார். 2026ம் ஆண்டான தற்போதைய தேர்தலை பொறுத்தவரை பலமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்காவது முறையாகக் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பி. சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் வி.எஸ். பாபு களம் இறங்கியுள்ளது இத்தொகுதியின் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்தர பாண்டியன் லூதர் சேத் நிறுத்தப்பட்டார். இந்த முறை தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், கொளத்தூரில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் விவாதப் பொருளாகி இருந்தது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தவெக பக்கம் திரும்புமா அல்லது ஸ்டாலினுக்கே விழுகுமா என்ற கேள்விகள் உள்ளன. இந்த வாக்குகள் திமுகவின் வாக்கு வங்கியில் கை வைக்குமா அல்லது எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா என்ற கேள்விகள் இருந்தது.
ஏனெனில் கொளத்தூரில் 2026 தேர்தலில் அது 86.11% ஆக உயர்ந்து இருந்தது. சுமார் 24% க்கும் அதிகமான உயர்வு என்பது அந்தத் தொகுதியின் தேர்தல் வரலாற்றிலேயே மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது இன்று காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தபால் எண்ணிக்கை தொடங்கியதுமே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இருந்தது. இது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் உற்சாகத்தை குலைக்கும் வண்ணம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிகள் அமைந்துள்ளன. முதல் சுற்று வாக்கு முடிவில் 886 வாக்குகள் குறைவாக பெற்று முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு அங்கு முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


















