Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்

மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்

கொல்கத்தா: மே 4-
மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ ப​தி​வின் போது, ஜனநாயக நெறி​முறை​களுக்கு மாறாக பல்​வேறு முறை​கேடு​கள் அரங்​கேறியதைத் தொடர்ந்​து, அங்​குள்ள அனைத்து 285 வாக்​குச் சாவடிகளி​லும் மறு​தேர்​தல் நடத்த இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.
அதன்​படி, மே 21-ம் தேதி மீண்​டும் வாக்​குப்​ப​திவு நடை​பெறும்; மே 24-ம் தேதி வாக்​கு​கள் எண்​ணப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று 293 தொகுதிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் கறுப்பு நிற டேப் ஒட்டி வாக்குகளைத் தடுத்​தது முதல், வாக்​காளர்​களைக் கண்​டறிய வாசனைத் திர​வி​யங்​களைப் பயன்​படுத்​தி​யது வரை பல்​வேறு முறை​கேடு​கள் குறித்த முக்​கிய தகவல்​களை தேர்​தல் ஆணை​யம் அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது.பால்டா தொகு​தி​யில் முறை​யான வாக்​காளர்​களை வாக்​களிக்க விடா​மல் தடுத்​ததோடு, வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் உள்ள குறிப்​பிட்ட வேட்​பாளர்​களின் சின்​னங்​களுக்கு நேராக கறுப்பு நிற டேப் ஒட்​டப்​பட்​டு, அந்​தப் பொத்​தான்​களை அழுத்த முடி​யாத​படி முடக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தது. மேலும், அதிர்ச்​சி​யூட்​டும் தகவலாக, வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தின் பொத்​தான்​களில் வாசனைத் திர​வி​யம் மற்​றும் மையைப் பூசி, வாக்​களித்​து​விட்டு வரும் வாக்​காளர்​களின் விரல்​களில் ஏற்​படும் வாசனை மற்​றும் நிறத்தை வைத்து அவர்​கள் யாருக்கு வாக்களித்தார்​கள் என்​ப​தைக் கண்​டறி​யும் சட்​ட​விரோதச் செயல்களும் பல வாக்​குச் சாவடிகளில் அரங்​கேறி​யுள்​ளன. இது வாக்​களிப்​ப​தன் ரகசி​யத் தன்​மையை முற்​றி​லு​மாகச் சிதைப்பதாக அமைந்​த​தாக தேர்​தல் ஆணை​யம் தெரிவித்துள்ளது.
மேலும், தொகுதி முழு​வதும் பரவலாக வாக்​குச் சாவடிகள் கைப்​பற்​றப்​பட்​டதை​யும், உண்​மை​யான வாக்​காளர்​கள் மிரட்​டப்​பட்​டுத் திருப்பி அனுப்​பப்​பட்​டதை​யும் தேர்​தல் பார்​வை​யாளர்​கள் உறுதி செய்​துள்​ளனர். தேர்​தல் அலு​வலர்​களே வாக்​காளர்​களுக்கு வழிகாட்​டு​வது போல வாக்​குப்​ப​திவு அறைக்​குள் நுழைந்து முறை​கேடு​களி​லும் ஈடு​பட்​டது வீடியோ பதிவு​கள் மூலம் தெரியவந்துள்ளது.