Home செய்திகள் உலக செய்திகள் பிரான்ஸில் பாரத கண்டுபிடிப்பு மாநாடு

பிரான்ஸில் பாரத கண்டுபிடிப்பு மாநாடு

பாரிஸ்: ஜூன் 15-
பி​ரான்ஸ் நாட்​டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இரு தலை​வர்​களும் இணைந்து ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ மாநாட்டை தொடங்கி வைத்​தனர்.
பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா நாடு​களில் பிரதமர் மோடி 6 நாட்​கள் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக டெல்​லி​யில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்​பட்​டுச் சென்​றார். இந்​நிலை​யில், பிரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது.
இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மாநாட்​டில் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்​றுள்​ளனர்.
பிரதமர் மோடி​யும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரானும் மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா – பிரான்ஸ் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​களும் ஒன்​றிணைந்து பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன. குறிப்​பாக, உலக நாடு​கள் எதிர்​கொள்​ளும் பல்​வேறு சவால்​களுக்கு இணைந்து தீர்வு காண்​கின்றன. சூரிய சக்​தி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஆகிய துறை​களில் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.
‘இந்​தியா – பிரான்ஸ் புதுமை கண்​டு​பிடிப்​பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறி​வித்​துள்​ளோம். இதன் ஒரு பகு​தி​யாகவே ‘பாரதத்​தின் புதுமை கண்​டுபிடிப்​பு​கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்​மூலம் இந்​தியா, ஐரோப்பிய நாடு​களின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் இடையே நேரடி தொடர்பு ஏற்​படும்.இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் புரட்சி நடந்து வரு​கிறது. எங்​கள் நாட்​டில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் செயல்​படு​கின்​றன. இதில் 125 நிறு​வனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்​றுள்​ளன. அதிக ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களைக் கொண்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தியா 3-வது இடத்​தில் உள்​ளது.