Home மாவட்டங்கள் பெங்களூர் தாமிரபரணி ஆற்​றில் ஆடைகளை வீச தடை

தாமிரபரணி ஆற்​றில் ஆடைகளை வீச தடை

மதுரை: ஜூலை 31-
தாமிரபரணி ஆற்​றில், ஆடைகளை வீச உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தடை விதித்​துள்​ளது.
நெல்லை மாவட்​டம் விக்​ரமசிங்​கபுரத்​தில் தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் ஆனந்த விலாஸ் மண்​டபம் உள்​ளது. அதைக் கையகப்​படுத்த தடை கோரி, பாப​நாசம் சிவனு பாண்​டியன் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.
அதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பு​கழேந்தி ஆகியோர் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தாமிரபரணி ஆற்​றின் படித் துறை​களில் முன்​னோருக்​குச் சடங்​கு செய்​யும் ​போது, தின​மும் ஒரு டன்​னுக்கு குறை​யாத அளவு பயன்​படுத்​தப்​பட்ட, பயன்​படுத்​தப்​ப​டாத ஆடைகள், துண்​டு​கள், காலணி​கள் மற்​றும் இறந்​தவர்​களு​டன் தொடர்​புடைய பொருட்​கள் ஆற்​றில் வீசப்​படு​கின்​றன.
தத்​தின் பெய​ரால்​கூட நீர்​நிலையை மாசுபடுத்த யாருக்​கும் உரிமை இல்​லை. தூய பருத்​தி​யால் நெய்​யப்​பட்ட ஆடைகள் இயற்​கை​யில் மட்​கக் கூடிய​வை. ஆனால், பாலியஸ்​டர் துணி​கள் மட்​கு​வ​தில்​லை. இந்த ஆடைகளால் ஆற்​றுப்​படு​கை​யில் பாக்​டீரி​யாக்​கள் உரு​வாகின்​றன.
நூறு ஆண்​டு​கள் வரை வாழும் இந்​தி​யக் கருப்பு ஆமை மற்​றும் இந்​திய ஃப்​ளாப்​ஷெல் ஆமை​களின் வாழ்​விட​மாக​வும் தாமிரபரணி ஆறு உள்​ளது. இந்த வகை ஆமை​கள், ஆற்​றில் வீசப்​பட்ட துணி​களில் சிக்கி இறக்​கின்​றன. ஆற்​றில் வீசப்​படும் சோப்​பு, ஷாம்பு போன்ற ரசாயனங்​களின் பயன்​பாடு மீன்​களுக்கு உயி​ரிழப்பை ஏற்​படுத்​தும்.நீர் நிலைகளை எந்த வகை​யிலும் மாசுபடுத்​து​வதை ஏற்க முடி​யாது. எனினும் இப்​பிரச்​சினை இந்​துக்​களின் நம்​பிக்​கைகள் மற்​றும் உணர்​வு​களு​டன் தொடர்​புடையது. தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் சடங்​கு​கள் மற்​றும் வழி​பாடு​களை முறைப்​படுத்​து​வ​தால் அடிப்​படை உரிமை​கள் மீறப்​ப​டாது. சுற்​றுச்​சூழல் பாதிப்பு இல்​லாமல், மக்​களின் உரிமை​களை மீறாமல் இருக்​கும் நிலை​யில் பக்​தர்​கள் ஆன்​மிகச் செயல்​களை மேற்​கொள்​ளலாம்.
இந்​துக்​களால் தாமிரபரணி ஆறு புனித​மான​தாகக் கருதப்​படு​வதை​யும், அதை வழிபடு​வதை​யும் நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம். அதனால்​தான், 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தாமிரபரணி புஷ்கரம் நடை​பெறுகிறது.
தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி’​யாக உரு​வகப்​படுத்​தப்​படு​கிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம். ஆறுகளைத் தெய்​வங்​களாகக் கருதும் நாம்​தான் கழி​வு​களை​யும் உரு​வாக்​கு​கிறோம். ஆறுகளுக்​குத் தீங்கு விளை​விப்​பது முன்​னோர்​கள் காலத்​தில் குறை​வாக இருந்​தது. அது ஆறுகளின் சுய சுத்​தி​கரிப்​புத் திறனுக்கு உட்​பட்​ட​தாகவே இருந்​தது. தற்​போது அவ்​வாறு இல்​லை.