Home செய்திகள் தேசிய செய்திகள் அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்

அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: ஜூன் 25–-
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; 1975ம் ஆண்டில் இதே நாளில், இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இந்த அவசரநிலை இன்னும் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, நீதித்துறையைக் கட்டுப்படுத்தவும் அதன் அதிகாரத்தைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கும் போது, பொதுமக்களின் வாழ்க்கை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் ஆகியவற்றுக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை இந்த அவசரநிலை நமக்கு நினைவூட்டுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதிலும், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.அவசரநிலையின் அநீதிகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக நின்று, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் தைரியத்துடன் பாதுகாத்த அனைவருக்கும் இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது, இவ்வாறு குறிப்பிடுள்ளார்.